×

நாகூர் அருகே செங்கல் சூளை உரிமையாளர் மர்ம சாவு.

 

நாகப்பட்டினம்,ஆக 1: நாகூர் அருகே செங்கல் சூளையில் தீயில் கருகி இறந்த உரிமையாளர் உடலை மீட்டு கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே ஒக்கூர் வெங்கிடங்கால் செம்பியநதி பகுதியை சேர்ந்தவர் நாத்திக மணி(50). இவர் வாழ ஓக்கூர் பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி செங்கல் சூளையை பார்த்து விட்டு வருவதாக மனைவி கவிதாவிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவிதா செங்கல் சூளைக்கு சென்றார். அங்கு நாத்திகமணி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து கவிதா நாகூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து நாகூர் போலீசார் நேற்று முன்தினம் (30ம் தேதி) வழக்குப்பதிவு செய்து நாத்திகமணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தடுமாறி தீயில் விழுந்து விட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாகூர் அருகே செங்கல் சூளை உரிமையாளர் மர்ம சாவு. appeared first on Dinakaran.

Tags : Nagor Nagapatnam ,Nagore ,Nagor ,Dinakaran ,
× RELATED நாகையில் மிதமான மழை பொதுமக்கள் மகிழ்ச்சி..!!