×

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை. இவரது மகன் மணிபாலன் (23). இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வாடகைக்கு தங்கி, கடந்த சில நாட்களாக வேலை தேடி வந்தார். வேலை கிடைக்காமல் மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை மணிபாலன் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மணிபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sripurudur ,Volliber ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் மீது தாக்குதல்