×

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பணி உயர்வு ஆணை: கலெக்டர் வழங்கினார்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையங்களில் பணிபுரிந்த 18 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, பணியாளராக பணி உயர்வு ஆணையினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 287 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த 18 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, அங்கன்வாடி பணியாளராக பணி உயர்வு ஆணையினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கல்யாணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பணி உயர்வு ஆணை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Kanchipuram ,Day ,Anganwadis ,Anganwadi Centers ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு