×

படப்பை அருகே ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த ஆதனஞ்சேரி ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post படப்பை அருகே ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Padappai ,Sriperumbudur ,Athananchery lake ,Patappai ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்