×

சென்னை மாநகர காவல் துறையில் ஓய்வுபெற்ற 32 பேருக்கு பாராட்டு: கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் ஆயுதப்படையில் பணியாற்றிய ஒரு இன்ஸ்பெக்டர், 14 உதவி ஆய்வாளர்கள், 17 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 32 காவல் அலுவலகர்கள் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பணி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், பெருநகர காவல்துறையில் 25 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழ்நாடு காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் 32 பேருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் தலைமையிட துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், நிர்வாக துணை கமிஷனர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகர காவல் துறையில் ஓய்வுபெற்ற 32 பேருக்கு பாராட்டு: கமிஷனர் சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police Department ,Chennai ,Chennai Metropolitan Police ,
× RELATED பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு...