×

ஆவடி அருகே 13 திடக்கழிவு சேகரிப்பு மின்கல வாகனங்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கினார்

ஆவடி: மின்கல திடக்கழிவு சேகரிப்பு வாகனங்கள் மற்றும் புதிய சாலை பணிக்கான பூமி பூஜையில் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கிவைத்தார். ஆவடி அருகே திருநின்றவூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அங்கு பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளடைவில் திருநின்றவூர் நகராட்சி பகுதிகள் விரிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அங்கு ரூ.40 லட்சம் மதிப்பில் 13 மின்கல திடக்கழிவு சேகரிப்பு வாகனங்கள் உள்பட 2 குப்பைகள் சேகரிக்கும் இலகுரக வாகனங்கள் மற்றும் பல்வேறு நகர் பகுதிகளில் ரூ.2.54 கோடி மதிப்பில் புதிய சாலைப் பணிகள் அமைப்பற்கான பூமி பூஜை இன்று காலை திருநின்றவூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருநின்றவூர் நகரமன்றத் தலைவர் உஷாராணி ரவி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று, 13 மின்கல திடக்கழிவு சேகரிப்பு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், கலைஞர் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.2.54 கோடி மதிப்பில் திருவேங்கட நகர் 14வது தெரு முதல் பிரதான சாலை வரையிலான பகுதியில் புதிய சாலை பணிகளுக்கான பூமி பூஜையில் சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்று துவக்கி வைத்தார்.

இதில் திருநின்றவூர் நகரமன்ற தலைவர் உஷாராணி ரவி, திமுக நகர செயலாளர் தி.வை.ரவி, நிர்வாகிகள் அன்பழகன், கமலக்கண்ணன், ரவி, பாபு, வார்டு செயலாளர்கள் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கோட்டீஸ்வரன், அசோக்குமார், தங்கராஜ், சரவணன், ஏகாம்பரம், சலீம், தேவி, யோகானந்தன், மோகனகிருஷ்ணன், பால்ராஜ், சுரேஷ், வெங்கடேசன், உஷாராணி, சதாசிவம், மாதவன், மகேஷ்குமார், மேகநாதன், பிரகாஷ், ஸ்ரீதேவி, முரளி, பாஸ்கரன், கிருஷ்ணன், ரவிச்சந்திரன், ஜீவானந்தம், சுரேஷ்குமார், பாபு, ஜெயகுமார், சுதர்சனம், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆவடி அருகே 13 திடக்கழிவு சேகரிப்பு மின்கல வாகனங்கள்: சா.மு.நாசர் எம்எல்ஏ துவக்கினார் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,CM Nasser MLA ,PM Nassar MLA ,Bhoomi Puja.… ,Dinakaran ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு