×

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: 3 பேர் கைது

பூந்தமல்லி: கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மதுரவாயல், கந்தசாமி நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன்(18). கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி, செல்போனை பறித்து சென்றனர். இதேபோல் பல இடங்களில் செல்போன் பறித்து சென்றதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மதுரவாயல் போலீசார், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளில் இருந்த உருவங்களை வைத்து, நேற்று முன் தினம் மாலை செம்மஞ்சேரியை சேர்ந்த பரமேஸ்வரன்(24), தேனாம்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்(19), சத்யா(24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோயம்பேடு, திருவேற்காடு, மதுரவாயல், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து, தனியே நடந்து செல்பவர்களை குறிவைத்து, கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Yogeswaran ,Maduravayal, Kandasamy Nagar, Chennai.… ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ