×

வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே உயர்வு: சென்செக்ஸ் 367 புள்ளிகள் அதிகரித்து 66,528 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: கடந்த வாரம் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள், வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 367 புள்ளிகள் அதிகரித்து 66,528 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 19,741 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. என்.டி.பி.சி. பங்கு 4%, பவர்கிரிட் பங்கு 3%, டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல் பங்குகள் தலா 2 விலை உயர்ந்து வர்த்தகமாயின.

டிசிஎஸ் பங்கு 1.9%, விப்ரோ பங்கு 1.5%, மாருதி சுசூகி, ஜேஎஸ்டிபுள்யு ஸ்டீல் தலா 1.4% விலை உயர்ந்து விற்பனையாயின. டாடா மோட்டார்ஸ் பங்கு, எச்.சி.எல்.டெக், இண்டஸ் இண்ட் வங்கி, எல் அண்ட் டி, இன்போசிஸ் பங்கு தலா 1% விலை உயர்ந்தது. பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் வங்கி, யுனிலீவர், ஐ.டி.சி., பார்த்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட் பங்கு விலை குறைந்து கைமாறின.

The post வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே உயர்வு: சென்செக்ஸ் 367 புள்ளிகள் அதிகரித்து 66,528 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!