×

மணிப்பூர் கொடூரம்!: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 8-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் தர வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கார்கே வலியுறுத்தினார். மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களவை 12மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூர் குறித்து 2மணிக்கு விவாதம் நடத்துவோம்: கோயல்

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிற்பகல் 2மணிக்கு விவாதம் நடத்த தயார் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளபோதும் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

The post மணிப்பூர் கொடூரம்!: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Parliament ,Delhi ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...