×

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி… பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில் சுமார் 5 மணி நேரம் தாமதம்.. பயணிகள் கடும் அவதி!!

திருச்சி : திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது.திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில் சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் சென்னை எழும்பூர் -திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சை, தஞ்சை – மயிலாடுதுறை , மயிலாடுதுறை – விழுப்புரம், திருச்சி – கரூர், கரூர்- திருச்சி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி – சந்திப்பு – சென்னை ராக்ஃபோர்ட் விரைவு ரயில் இன்று இரவு 10.50 மணிக்கு பொன்மலையில் இருந்து புறப்படும் என்றும் மன்னார்குடி – வேளாங்கண்ணி ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பதில் திருவெறும்பூரில் இருந்து இன்று புறப்படும் என்றும் திருச்சி – வேளாங்கண்ணி ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு பதில் திருவெறும்பூரில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி… பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில் சுமார் 5 மணி நேரம் தாமதம்.. பயணிகள் கடும் அவதி!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Pandiyan ,Padhikai ,Junction Railway Station ,Paddy ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்