×

கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம்

 

நிலக்கோட்டை, ஜூலை 31: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, கர்நாடகாவில் இருந்து, வெள்ளரிப்பிஞ்சுகளை ஏற்றிக்கொண்டுவந்த லாரி உசிலம்பட்டி அடுத்த, சந்தையூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்றது. லாரியை திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் ஓட்டி சென்றார். இவரது லாரி, செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த போது வத்தலகுண்டு பகுதியில் இருந்து, திண்டுக்கல் நோக்கி 3 கார்கள் வேகமாக வந்தது.

அப்போது, ஒரு காரை, மற்றொரு கார் முந்தி செல்வதற்காக சென்ற போது, எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், 2 கார்களும் ஒன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, லாரி சாலை நடுவே கவிழ்ந்தது. கார்களில் சென்ற 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து, செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Sembatti, Dindigul district ,Karnataka, Usilampatti ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்