×

100 நாள் வேலை திட்ட குறைதீர்ப்பாளருக்கு கூடுதல் பொறுப்பு

 

அரியலூர், ஜூலை 31:தேசிய ஊரக வேலை திட்ட குறைதீர்ப்பாளருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் குறைதீர்ப்பாளராக பணிபுரிந்து வரும் நபர்களை பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கும் குறைதீர்ப்பாளராக பணிபுரிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் குறைதீர்ப்பாளராக பணிபுரிந்து வரும் வைத்தீஸ்வரன் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பொதுமக்கள் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான புகார் மற்றும் குறைகள் ஏதும் இருப்பின் 8925811301 என்ற எண்ணிலும், ombudsman.ariyalur@gmail.com mailto:ombudsman.ariyalur@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

 

The post 100 நாள் வேலை திட்ட குறைதீர்ப்பாளருக்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ombudsman ,District ,Collector ,Annemarie Swarna… ,Dinakaran ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...