- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
- திருவாரூர்
- தமிழ்நாடு அரசு
- குறுவை
- கர்நாடகா அரசு
திருவாரூர், ஜூலை 31: குறுவை நெற்பயிருக்கு தேவையான நீரினை கர்நாடக அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்று தர வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி. கே வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் திருவாரூரில் நேற்று நிருவர்களிடம் கூறியதாவது, மணிப்பூர் மாநிலத்தில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மற்றும் அமைதி நிலை திரும்பி வருகிறது. மணிப்பூர் மாநிலம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபேச தயாராக இருக்கும்போது நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருவது சரியானது அல்ல.டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத் துவங்கியுள்ளன. எனவே இதற்கு தேவையான நீரினை கர்நாடகா அரசிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாகை மாவட்டங்களில் நடைபெற்று வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணியினை தடுத்து நிறுத்திட வேண்டும்.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேவையற்ற முறையில் விவசாய நிலங்களை அழித்து வருவது கண்டனத்துக்குரியதாகும்.
The post தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்: கர்நாடகத்தில் இருந்துதமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தர வேண்டும் appeared first on Dinakaran.