×

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் 4 காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஏ.எஸ்.பி. ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராகவும், விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரமேஷ்பாபு உயர் நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும், அரியலூர் ஏ.எஸ்.பி மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கப்பிரிவின் எஸ்பியாகவும், சேலம் சைபர் கிரைம் ஏ.எஸ்.பி செல்லப்பாண்டியன் ஆவடி சிறப்பு காவல்படை எஸ்பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

The post 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Home Secretary ,Amutha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...