×

மீண்டும் மஞ்சப்பைக்கு மாறுங்க

ஆண்டிபட்டி, ஜூலை 30: பாலிதீன் பைகளால் மக்களுக்கும், இயற்கைக்கும் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தினார்.
பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது கேரி பேக்கை தவிர்த்து, மஞ்சப்பை கொண்டு செல்ல வேண்டும் என்றும், மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எனவே, மாவட்டத்தில் ஓட்டல்கள், டீக்கடைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாட்டை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மீண்டும் மஞ்சப்பைக்கு மாறுங்க appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...