×

மருதூர் பேரூராட்சியில் மயான கொட்டகையை சீரமைக்க கோரிக்கை

குளித்தலை, ஜூலை 30: குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுமருதூரில் 5வது வார்டு குடித்தெரு பகுதியில் ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கோ, எரியூட்டுவதற்கோ இயலாதவாறு சேதமடைந்துள்ளது.

தற்போது மயான கொட்டகையின் மேற்கூரை பெயர்ந்தும், துருப்பிடித்தும் உள்ளது. இதனால் இறுதி சடங்குகள் செய்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். விரைவில் மழைக்காலம் வர உள்ளது. அதற்கு முன் சேதமடைந்த மயான கொட்டகையை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மயானத்துக்கு புதிய கட்டிடம் கட்டி, மின்வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, மருதூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மருதூர் பேரூராட்சியில் மயான கொட்டகையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Marudur ,Kulithalai ,5th Ward Kudita Street ,Mettumarudur ,Marudur Municipality ,
× RELATED மருதூர் ஊராட்சியில் 2019 முதல் 2022 வரை...