×

நெல்லை அருகே வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது

நெல்லை, ஜூலை 30: வள்ளியூரில் போக்சோ வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு போக்சோ வழக்கில் தொடர்புடைய அழகப்பபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ரமேஷ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு நெல்லை போக்சோ நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து ரமேஷை வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post நெல்லை அருகே வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Tags : Absconder ,Nellai ,POCSO ,Valliyur ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...