×

அண்ணனை தாக்கிய தொழிலாளி கைது

தேன்கனிக்கோட்டை, ஜூலை 30: தளி அருகே உள்ள ஒன்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(39), கூலித்தொழிலாளி. இவரது தம்பி நாராயணன் (37). இவர்களுக்குள் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாராயணன் உருட்டு கட்டையால் நாகராஜை தாக்கினார். இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தளி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், நாராயணனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

The post அண்ணனை தாக்கிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Nagaraj ,Onnati ,Thali ,Narayanan ,
× RELATED பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்