×

100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பள்ளிபாளையம், ஜூலை 30: குமாரபாளையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 100 கிலோ குட்காவை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை அருகே ஏமப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம்(47). இவர், தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, பல கடைகளுக்கு ரகசியமாக விற்பனைக்கு அனுப்பவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், மொளசி எஸ்ஐ ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பாலசுந்தரத்தின் வீட்டில் சோதனையிட்டனர். இதில், அவரது வீடு மற்றும் மாட்டு கொட்டகையில் 100 கிலோ எடையுள்ள குட்கா, கூல்லிப், பான் மசாலா ஆகிய புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாலசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ₹45 ஆயிரம் மதிப்பிலான புகயைிலை பொருட்களை கைப்பற்றினர்.

The post 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kumarapalayam.… ,Dinakaran ,
× RELATED தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்