புதுடெல்லி: அலோக் இன்டஸ்ட்ரி நிறுவனத்திடம் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அதிகாரிகள் ரூ.3 லட்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி குருகிராம், சென்னை ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது சுமார் 59.80 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை இயக்குநர்களாக மஞ்சித் சிங், புனித் துக்கல், மூத்த தொழில்நுட்ப உதவியாளர் ருஹி அரோரா மற்றும் அலோக் இன்டஸ்ட்ரியை சேர்ந்த ரெஷாப் ரைசடா ஆகியோரை சிபிஐ நேற்று கைது செய்தது.
The post கார்ப்பரேட் அமைச்சக அதிகாரிகள் உள்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.