×

மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு சவுக்கு சங்கர் அட்மின் கைது

திருச்சி: மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து அவதூறு பரப்பிய சவுக்கு சங்கர்’ டுவிட்டர் பக்க அட்மின் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் பிரதீப் (23). இவர் ‘வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர்’ என்ற ட்விட்டர் பக்கத்தின் அட்மினாக இருக்கிறார். இவர் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவதுாறுகளும், கிண்டல், கேலி செய்து மீம்ஸ்களும், வீடியோக்களும் வெளிட்டு வந்தார்.

இது குறித்து இல்லத்தரசிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் முறையான புகார்கள் எதுவும் பதியப்படவில்லை. இதனால் அவர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து தொடர்ந்து கிண்டல் செய்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அரியலுார் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சக்திபாபு என்பவர் பிரதீப் மீது உடையார் பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் சென்னை தி.நகரில் நேற்று மதியம் பிரதீப்பை உடையார்பாளையம் எஸ்எஸ்ஐ பழனிவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் சாலைமார்க்கமாக அவர் உடையார்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு சவுக்கு சங்கர் அட்மின் கைது appeared first on Dinakaran.

Tags : Chawku Shankar ,Twitter ,Trichy ,Chavku Shankar ,Thiruvallur… ,Chavik Shankar ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...