×

கடலில் ஹெலிகாப்டர் விழுந்து: 4 ஆஸ்திரேலிய வீரர்கள் மாயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மாகாணத்தில் ராணுவப் பயிற்சி நடந்து கொண்டிருந்த போது, வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், அதில் இருந்த நான்கு ஆஸ்திரேலிய ராணுவ விமானக் குழுவைக் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘எம்ஆர்எச்-90 தைபான் வகை ஹெலிகாப்டர் நேற்று இரவு விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானக் குழுவை சேர்ந்த 4 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் 4 பேரை தேடும் பணி தொடர்வதால், 30,000 பேர் கொண்ட அமெரிக்க-ஆஸ்திரேலிய தாலிஸ்மேன் சேபர் கூட்டுப் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்றார்.

The post கடலில் ஹெலிகாப்டர் விழுந்து: 4 ஆஸ்திரேலிய வீரர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Sydney ,Brisbane ,Australia ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது