×

செங்கல்பட்டில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் ராமச்சந்திரன்..!!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், காற்றில் இருந்து குடிதண்ணீர் தயாரிக்கும் இயந்திரம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலையில் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டினை அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள். தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்குகின்றது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் படகு குழாம்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தர வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. முட்டுக்காடு படகு இல்லத்தில் 2022 – 23ம் நிதி ஆண்டில் 2,82,142 சுற்றுலா பயணிகள் சாகச படகு சவாரி செய்தனர். 2023 – 24ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் இன்று வரை 1,17,922 பயணிகள் சாகச படகு சவாரி செய்துள்ளனர்.

இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரும் வகையில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினர், நேட்டிவ் மெடிகேர் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனத்தினருடன் இணைந்து தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், காற்றில் இருந்து குடிதண்ணீர் தயாரிக்கும் இயந்திரம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை அமைத்துள்ளனர். இதனால் முட்டுக்காடு படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைத்துள்ளன. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இவற்றை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் திரு.லட்சுமிபதி. இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொதுமேலாளர் லி.பாரதிதேவி, பயிற்சி ஆட்சியர் திரு.ஆனந்த்குமார், இ.ஆ.ப., ராயல் என்பீல்டு நிறுவனத்தின் திரு.வித்யாத் சிங், திரு.சுனில், திரு.அலெக்ஸ் விஜய், நேட்டிவ் மெடிகேர் சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனத்தின் திரு.எ.எஸ்.சங்கர நாராயணன் உள்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு மாண்புமிகு சுற்றுாலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் திருமதி.லி.பாரதி தேவி அவர்கள், உள்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post செங்கல்பட்டில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் ராமச்சந்திரன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ramachandran ,Chengalpattu ,Chennai ,Chengalpattu District ,Tamil Nadu Tourism Development Corporation ,Muttukkadu Boathouse ,
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது