×

பவன்கல்யாணின் ‘ப்ரோ’ திரைப்படம் வெளியீடு திரையை கிழித்த 6 ரசிகர்கள் கைது

திருமலை : ஆந்திராவில் பவன்கல்யாணின் ‘ப்ரோ’ திரைப்படம் நேற்று வெளியான போது திரையை கிழித்த 6 ரசிகர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கில் நடிகர் பவன்கல்யாண், சாய்தரம் தேஜ், பிரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ப்ரோ’ திரைப்படம் நேற்று ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் வெளிடப்பட்டது. அதன்படி, பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் வெளியானது. இதில், ரசிகர்கள் காலை முதல் உற்சாகமாக பேனர்கள் கட்டி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வந்தனர்.

திரையில் பவன்கல்யாணை பார்த்தவுடன் காகிதங்களை கிழித்து எரிந்து சிலரும், சிலர் விசில் அடித்தும் கொண்டாடினர். சிலர் அதித உற்சாகத்தில் திரைக்கு பால் அபிஷேகம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, அடித்து பிடித்து திரைக்கு மேல் ஏறியதில் கூட்ட நெரிசலில் திரையை கிழித்துள்ளனர்.

இதனால், உடனடியாக படம் நிறுத்தப்பட்டு திரையை கிழித்த 6 ரசிகர்களை தியேட்டர் உரிமையாளர் பிடித்து பார்வதிபுரம் மான்யம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பவன்கல்யாணின் ‘ப்ரோ’ திரைப்படம் வெளியீடு திரையை கிழித்த 6 ரசிகர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pawan ,Thirumalai ,Pawan Kalyan ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...