- Thiruvaiyar
- திருவியார்
- அரசு இசைக் கல்லூரி
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
- திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
- அரசு இசைக் கல்லூரி
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் தீப்பற்றி எரிந்தது. தீயணப்பு வீரர்கள் போராடி தீணை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா அலுவலகத்தின் அருகே தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர் மாணவி விடுதியும் உள்ளது.
அரசு இசைக்கல்லூரியில் சுமார் 230 மாணவி மாணவிகள் வயலின், தவில், வீணை, வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். நேற்று திடீரென மாணவி விடுதியின் அருகே நாணல் பில்லின் மீது தீப்பற்றி எரிந்தது. மாணவ, மாணவிகள் பேரூராட்சி பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ மளமளவென பிடித்து எரிந்தது. வளாகத்தில் இருந்த செடி கொடி மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. கரும்புகை கிளம்பியது. திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன், திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் அருண கணேசன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்து தீயை தீயை அணைக்க போராடினர்.
ஆனால் தீ கட்டுக்குள் அடங்கவில்லை. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறக தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதேபோல் திருப்பந்துருத்தி கீழ திருப்பந்துருத்தி செபஸ்தியார் கோயில் தெருவின் அருகே குடமுருட்டி கரையோரத்தில் 4 ஏக்கர் வைக்கோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியில் 130 வீடுகள் 80 குடிசை வீடுகள் இருக்கின்றன. ஆற்றில் தண்ணீர் சென்றதால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தண்ணீரை எடுத்த வந்து தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ மேலும் பரவாமல் இருப்பதற்கு திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் அருணா கணேசன் தலைமையில் வீரர்கள் வந்து தீயை அணைததனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் தீவிபத்து-திருவையாறில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.