×

மரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘பிளெக்ட்ராந்தஸ்’

*சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இதனால், இந்த பூங்காக்கள் எப்போதும் பராமரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம் இரண்டாம் சீசன் துவங்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தோட்டக்கலைத்துறை தயார் செய்து வருகிறது. இதனால், மலர்கள் தற்போது குறைந்து காணப்படுகிறது.

ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இந்நிலையில், ஊட்டியில் உள்ள மரவியல் பூங்காவிலும் இரண்டாம் சீசனுக்காக தற்போது மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம், ஒரு சில செடிகளில் மட்டும் மலர்கள் காணப்படுகிறது. குறிஞ்சி மலர்களை போன்று காட்சியளிக்கு பிளெக்ட்ராந்தஸ் மலர் செடிகளில் தற்போது நீல நிறத்தில் மலர்கள் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post மரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘பிளெக்ட்ராந்தஸ்’ appeared first on Dinakaran.

Tags : Arboretum ,Nilgiri ,Dinakaran ,
× RELATED மஞ்சூர் அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்த காட்டு மாடு