×

மதுரை திருநகரில் லோடுமேன் கொலையில் 5 பேர் கைது: ஒருவருக்கு வலை

திருப்பரங்குன்றம், ஜூலை 29: மதுரை திருநகர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (35). ேலாடுமேனாக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள நெல்லையப்பபுரத்தை சேர்ந்த ராஜா (27), பாண்டியன் நகரை சேர்ந்த விஸ்வா (20), ஆனந்த் (19), கார்த்திக் ஆகியோருக்கு முன்பகை இருந்துள்ளது. இக்கும்பல் கடந்த ஜூலை 23ம் தேதி சரவணனை தாக்கியுள்ளது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 26ம் தேதி திருநகர் 5வது பஸ் ஸ்டாப் அருகிலுள்ள மதுபான கடை முன்பு கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரவணனை தாக்கியது.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை தொடர்பாக போலீசார் ராஜா, விஸ்வா, ஆனந்த், கார்த்திக், ராஜ்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தாமரைக்கனியை தேடி வருகின்றனர்.

The post மதுரை திருநகரில் லோடுமேன் கொலையில் 5 பேர் கைது: ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Loduman ,Tiruparangunram ,Saravanan ,Thiruvalluvar ,Madurai district ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு!