×

போலி பட்டா மூலம் ஏரி நிலத்தை அபகரித்த தாய், மகன் கைது

சென்னை: கொரட்டூரில் அரசுக்கு சொந்தமான ஏரி இடத்தினை ராஜகுமாரி மற்றும் ஜெயராமன் ஆகியோர் போலியாக தயாரிக்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மென்ட் ஆவணங்கள் பதிவு செய்து அபகரித்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வில்லிவாக்கம் சார்பதிவாளர் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வழக்குபதிவு ெசய்து விசாரணை நடத்தினர்.

அதில், கொரட்டூர் சர்வே எண் 809ல் அடங்கிய ஏரி உள்வாய் இடத்திற்கு போலியான பட்டா தயார் செய்து 1316 சதுரஅடி இடத்தினை ராஜகுமாரி அவரது மகன் சதிஷ் என்பவர் பெயரிலும், அதே போல் 1326 சதுரஅடி இடத்தினை ஜெயராமன், அவரது மகன் ராதா என்பவர் பெயரிலும் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மென்ட் ஆவணமாக பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சூளைமேட்டை சேர்ந்த ராஜகுமாரி (64), வில்லிவாக்கத்தை சேர்ந்த சதிஷ் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post போலி பட்டா மூலம் ஏரி நிலத்தை அபகரித்த தாய், மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajakumari ,Jayaraman ,Korattur ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி