செங்கல்பட்டு: செங்கல்பட்டில், மணிப்பூர் கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், ஒன்றிய பாஜ அரசுக்கு அரை நிர்வாணத்துடன் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று முன்தினம் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. இதில், அரை நிர்வாணத்தில் கலந்துகொண்ட இளைஞர் பெருமன்றத்தினர், ‘மோடிக்கு குஜராத்’, ‘பைரேன் சிங்குக்கு மணிப்பூர்’, ‘பற்ற வைத்த பாஜ’, பற்றி எரிகிறது மணிப்பூர், மணிப்பூரை பாதுகாப்போம்! வெறுப்பு அரசியலை வேரறுப்போம் என்று எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சேகுவேராதாஸ் தலைமையில் நடைபெற்றது.
The post மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றம் நூதன போராட்டம் appeared first on Dinakaran.