×

சாலை பணியில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் அருகே கார் டயர் வெடித்து தறிக்கெட்டு ஓடிய கார் மோதி சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேடல் பகுதியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு பேரிகார்டு அமைக்கும் பணியில் மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா அடுத்த டிக்லிச்சர் மற்றும் விராய்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சென்டர் மீடியன் பேரிகார்டுக்கு கம்பி கட்டும் பணியில் அப்துல் அலீம் (19), அனிக்குல் (20) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, எதிர்திசையில் சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் அதிவேகமாக வந்த காரின் டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார் வேலை செய்துகொண்டிருந்த அப்துல் அலீம், அனிக்குல் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். அதில், அப்துல் அலீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அனிக்குல் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த அப்துல் அலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலையில் பலத்த காயம் அடைந்த அனிக்குலை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சாலை பணியில் ஈடுபட்டவர்கள் மீது கார் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Vedal ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...