×

ஏரல் அருகே 5 ஆயிரம் வாழைகள் தீயில் எரிந்து நாசம்

ஏரல் : ஏரல் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசமானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேலமங்கலக்குறிச்சி பகுதியில் விவசாயிகள், வாழைகள் பயிரிட்டுள்ளனர். இங்குள்ள வாழை தோட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. விவசாயிகள் பல மணி நேரம் போராடி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.

எனினும் மேலமங்கலக்குறிச்சி அந்தோணி (48) என்பவரது தோட்டத்தில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழைகள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அருகில் உள்ள இதே ஊரை சேர்ந்த லிங்கம், பிச்சைமணி ஆகியோரது வாழை தோட்டத்திலும் தீ பரவி அங்குள்ள வாழைகளும் எரிந்து கருகின. இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் சேதமானதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

The post ஏரல் அருகே 5 ஆயிரம் வாழைகள் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Aeral ,AREL ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…