×

சாரல் இல்லாத நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுது

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி : குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குற்றாலத்தில் ஜூன் மாத சீசன் சுமாராக காணப்பட்ட நிலையில் ஜூலை மாதம் நன்றாக உள்ளது. நேற்று மதியம் வரை வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு இதமான சூழல் நிலவியது. குறிப்பிடத்தக்க அளவில் நேற்று சாரல் இல்லாத நிலையிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. ஆடி மாதம் துவங்கியது முதல் விடுமுறை தினங்களை போன்றே வாரத்தின் வேலை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் வரிசையின்றி அனுமதிக்கப்படுகின்றனர்.

The post சாரல் இல்லாத நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுது appeared first on Dinakaran.

Tags : Charal ,Koortal ,Tenkasi ,Kurtalam ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...