×

கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது திருவலம் அருகே பரபரப்பு

திருவலம், ஜூலை 28: திருவலம் அருகே கத்தியை காட்டி மிரட்டிய பணம் மற்றும் செல்போன் பறித்து சென்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் மலப்புறம் குழிமன்னா பகுதியை சேர்ந்தவர் முனுசாமில்லின் (23). காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் முனுசாமில்லின் நண்பர் காஹீக்கின் பிறந்தநாள் விழாவையொட்டி கரிகிரி கிராமம் தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள கல்குவாரி குளத்தின் அருகே பிறந்தநாள் விழாவினை நேற்று முன்தினம் மாலை கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், 2 சிறுவர்கள் பீர் பாட்டில்களை உடைத்தும், கத்தியைக்காட்டி மிரட்டியும் முனுசாமில்லினிடம் செல்போன், ₹5 ரொக்க பணத்தினையும் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் அதிர்ச்சி அடைந்த முனுசாமில் இதுகுறித்து நேற்று திருவலம் காவல் நிலைய புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த எஸ்.ஐ.சிலம்பரசன் விசாரணை நடத்தினார். அதில் பணம்பறித்து சென்றவர்கள் திருவலம் அடுத்த கசம் தனியார் பண்ணையில் வசிக்கும் நவீன்குமார்(19), பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது திருவலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvalam ,
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...