×

பாளை மகாராஜநகர் முதியோர் இல்லத்துக்கு சேர், டேபிள் வழங்கல்.

கேடிசி நகர், ஜூலை 28: பாளை மகாராஜநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான மண்டபத்தில் இயங்கிவரும் முதியோர் இல்லத்தில் சுமார் 35 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக பாளை தியாகராஜநகர் அன்னதான குழுவினர் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 9 டைனிங் டேபிள் மற்றும் 27 சேர்கள் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சண்முகவேல், சுப்பிரமணியன், கோபி, நாகராஜன், ஐஸ்வர்யம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாளை மகாராஜநகர் முதியோர் இல்லத்துக்கு சேர், டேபிள் வழங்கல். appeared first on Dinakaran.

Tags : Pala Maharajanagar ,KDC Nagar ,Maharajanagar ,Dinakaran ,
× RELATED பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு