×

ராஜாவின்கோவில் பஞ்சாயத்தில் ரூ.33.44 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகள்

ஓட்டப்பிடாரம், ஜூலை 28: ஓட்டப்பிடாரம் தொகுதி மற்றும் யூனியனுக்குட்பட்ட ராஜாவின்கோவில் பஞ்சாயத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.33.44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இதே பகுதியில் தரைப்பாலத்திற்கு பதிலாக ரூ.1.96 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட பாலப்பணிகளை சண்முகையா எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓட்டப்பிடாரம் தாலுகா பரிவள்ளிக்கோட்டை, ஒட்டநத்தம், மணியாச்சி, மேல பாண்டியாபுரம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சாமிநத்தம் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பதிவு செய்யப்படுவதை பார்வையிட்டார்.

பின்னர் புதிம்புத்தூர் ஜான் த பாப்ட்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 133 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் வட்ட வழங்கல் அலுவலர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ஆனந்த், விஏஓக்கள் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் யூனியன் ஆணையாளர் சிவபாலன், ஏபிடிஓ துரைராஜ், வருவாய் ஆய்வாளர் சுலோச்சனா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், சிறுபான்மை அணி ஞானதுரை, ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ராஜாவின்கோவில் பஞ். துணை தலைவர் பிரபா ஜான்சன், கிளை செயலாளர்கள் இளங்கோ, சிவமுருகன், வீரபாண்டி அசோக், மகளிரணி தங்கம், கொடியங்குளம் பஞ். தலைவர் அருண்குமார், தொண்டரணி கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜாவின்கோவில் பஞ்சாயத்தில் ரூ.33.44 லட்சத்தில் பல்வேறு திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Rajavinkoil Panchayat ,Ottapidaram ,Dinakaran ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்