×

பாலியல் தொழில் 2 புரோக்கர் கைது

சென்னை: வடபழனியில் வாட்ஸ்அப் குழு அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை வடபழனி வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக குடியிருப்புவாசிகள் ஆன்லைன் மூலம் போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து, விபசார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரகசியமாக அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு வாலிபர்கள் வந்து சென்றதை கவனித்த போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.

அப்போது, வாட்ஸ்அப் குழு மூலம் இளம்பெண்கள் புகைப்படங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் பாலியல் புரோக்கரான பழைய வண்ணாரப்பேட்டை மண்ணப்பன் 2வது தெருவை சேர்ந்த பஷீர் அகமது இப்ராஹிம் (60), நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பண்டக சாலை தெருவை சேர்ந்த முகமது அலி (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீட்டகப்பட்டனர்.

The post பாலியல் தொழில் 2 புரோக்கர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vadapalani ,Dinakaran ,
× RELATED பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை...