×

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பாஜ அரசை கண்டித்து காங். மெழுகுவர்த்தி பேரணி

 

செங்கல்பட்டு: மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் குகி, மெய்தி ஆகிய பழங்குடியினர் இடையே பயங்கர மோதல் நடைப்பெற்று வருகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில பாஜ அரசுகள் எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேற்று முன்தினம் மாலை மெழுகுவத்தி ஏந்தி கண்டன பேரணி நடந்தது.

இதில், மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜர் சிலையில் இருந்து காங்கிரசார் மெழுகுவத்தி ஏந்தி கண்டன பேரணி நடத்தினர். செங்கல்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இப்பேரணியில், ஒன்றிய, மாநில பாஜ அரசுகளை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தி, கோஷமிட்டபடி சென்றனர். பின்னர், ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, மணிப்பூரில் நிலவி வரும் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடியும் மணிப்பூர் மாநில முதல்வரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

The post மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத பாஜ அரசை கண்டித்து காங். மெழுகுவர்த்தி பேரணி appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP government ,Manipur riots ,Candle rally ,Chengalpattu ,Manipur ,Candle ,Dinakaran ,
× RELATED நேரடியாக எதிர்க்க முடியாமல் போலி...