×

கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க கோரி ஐ.பி.எஸ் அதிகாரி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மாஜி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, லோதா குழு பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது தெரிந்தால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய குழுவை அணுகி புகார் கொடுத்து நிவாரணம் பெறலாம் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க கோரி ஐ.பி.எஸ் அதிகாரி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IPS ,Chennai ,IPL ,Ex-IPS ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள்...