×

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து விரைந்து விசாரிக்க கோரி ஆகஸ்ட் 1ல் ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை குறித்து விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆக.1ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எனவே, கோடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில், ஏற்கெனவே அறிவித்தபடி, வரும் 1ம் தேதி 10-30 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், அதிமுகவில் உள்ள அணி நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

The post கோடநாடு கொலை, கொள்ளை குறித்து விரைந்து விசாரிக்க கோரி ஆகஸ்ட் 1ல் ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kondanadu ,Pannerselvam ,Chennai ,Kodanadu Bungala ,Kodanadu ,Bannerselvam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...