×

சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் பார்சல் பேக்கேஜிங் யூனிட் சேவை அறிமுகம்

சென்னை: சென்னை மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள தி.நகர், மயிலாப்பூர், சூளைமேடு, கிரீம்ஸ் சாலை, கோபாலபுரம், தேனாம்பேட்டை, தி.நகர் வடக்கு, திருவல்லிக்கேணி ஆகிய 8 அலுவலகங்களில் பார்சல் பேக்கேஜிங் யூனிட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமான பிரிவு இந்த 8 தபால் நிலையங்களிலும் உள்ளது. இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் அனுப்ப விரும்பும் பொருட்களை இந்தியாவிற்குள்ளோ அல்லது வெளிநாடுகளுக்கோ துரிதமாக அனுப்பலாம். பார்சலின் எடைக்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறுஞ்செய்தி மூலமாக பார்சல் நிலை மற்றும் பட்டுவாடா செய்யப்பட்ட நிலை ஆகியவை தெரிவிக்கப்படும். இணையதளம் மூலம் பட்டுவாடா நிலையை கண்காணிக்கும் வசதியும் உண்டு.

The post சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் பார்சல் பேக்கேஜிங் யூனிட் சேவை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Packaging Unit Service ,Chennai Central Postal Zone ,Chennai ,Superintendent ,Divya Chandran ,Parcel Packaging Unit Service ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!