×

அதிகாரியை அவதூறாக பேசியவர் மீது வழக்கு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஈக்காடு மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை மின்வாரிய பொறியாளராக பணியாற்றி வருபவர் ராணி. சின்ன ஈக்காடு பிடிசி நகர் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் டேவிட்(38). இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின் இணைப்பு சம்பந்தமாக கம்பம் நடுவது குறித்து மனு கொடுத்திருந்தார். பல முறை அலுவலகம் வந்து விசாரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆத்திரம் அடைந்தவர் குடிபோதையில் நேற்றுமுன்தினம் மின் இணைப்பு சம்பந்தமாக கம்பம் நடுவது குறித்து விசாரிக்க வந்துள்ளார்.

அப்போது, இளநிலை மின்வாரிய பொறியாளர் ராணியை தகாத வார்த்தைகளால் பேசி பணியை செய்யவிடாமல், பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி தாக்கும் அளவிற்கு உரத்த குரலில் பேசி அவமதித்துள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான ராணி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்குள்ளாக்கிய டேவிட் என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post அதிகாரியை அவதூறாக பேசியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Rani ,Ekkadu Electricity Board ,Chinna Ekkadu ,PTC Nagar… ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்