×

மேட்டூர் அணைக்கான காவிரி நீர்வரத்து 10,000 கன அடியை தாண்டியது!

சேலம்: காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கன அடியை தாண்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,343 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10,232 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 கனஅடியாக இருந்தது. ஆனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்தது. போதிய மழை பெய்யாத காரணத்தினாலும், கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீர், திறக்கப்படாத காரணத்தினாலும் நாள்தோறும் வினாடிக்கு 200 கன அடிக்கும் குறைவாகவே நீர்வரத்து இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரானது நேற்று முன்தினம் முதல் தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவுக்கு வர தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை 5,000 கனஅடியாகவும், நேற்று காலை 7,000 கனஅடியாகவும், நேற்று இரவு 10,000 கனஅடியாகவும், இன்று காலை 15,000 கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று மாலை வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்த தண்ணீர், இன்று காலை வினாடிக்கு 3,343 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,232 கன அடியாக உள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கான காவிரி நீர்வரத்து 10,000 கன அடியை தாண்டியது! appeared first on Dinakaran.

Tags : caviri ,Salem ,Kaviri ,Mattur Dam ,Matur Dam ,Caviri Fountain ,Dinakaran ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...