×

வாலிபருக்கு கத்திக்குத்து

 

திருமங்கலம், ஜூலை 27: கள்ளிக்குடி அருகேயுள்ள குராயூரினை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் சரவணக்குமார்(22). இதே கிராமத்தினை சேர்ந்தவர் முத்துகணேஷ்(32). இவர்களுக்கிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் குராயூரினை அடுத்துள்ள வேப்பங்குளத்தில் சரவணக்குமார் தனியாக நின்றுள்ளார். அப்போது முத்துகணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் அவருடன் தகராறு செய்துள்ளனர்.

தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த அவர்கள் சரவணக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். படுகாயமடைந்த சரவணக்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து, முத்துகணேஷ் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

The post வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Dhanasekhar ,Kurayurin ,Kallikudi ,Saravanakumar ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...