- வடமாடு மஞ்சு
- நம்புத்தலை கோவில் திருவிழா
- வடமடு மஞ்சுவிரட்டு
- நம்புத்தலை முத்துமாரியம்மன்
- தொண்டி
- Vadamadu
- மஞ்சு
தொண்டி, ஜூலை 27: நம்புதாளை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. தொண்டி அருகே நம்புதாளை கண்மாய் கரை குடியிருப்பில் உள்ள காள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், கருமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் கிராமத்தினர் சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. பல்வேறு பகுதியிலிருந்து மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும் மாடுகளுக்கும் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. 5க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
The post நம்புதாளை கோயில் விழாவில் வடமாடு மஞ்சு விரட்டு: 5 பேர் காயம் appeared first on Dinakaran.