×

இளம்பெண் தற்கொலை

 

சிவகாசி, ஜூலை 27: சிவகாசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அருகே விஸ்வநத்தம் தலையாரி காம்பவுண்ட்டை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி செல்வி(38). ஆறு ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழும் இவருக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவரது மகள் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி, வீட்டில் வேலை செய்யாமல் இருந்தார். இதை செல்வி கண்டித்ததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த செல்வி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Viswanantham ,
× RELATED சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு...