×

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் போலீசார் விசாரணை

 

தஞ்சாவூர், ஜூலை 27: தஞ்சாவூர் பாத்திமாநகர் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் முதியவர் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post அடையாளம் தெரியாத முதியவர் சடலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Pathimanagar ,Scorpion Police ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...