×

பெரியதாழை கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

சாத்தான்குளம், ஜூலை 27: சாத்தான்குளம் அருகே பெரியதாழை கடல் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பெரியதாழையை சேர்ந்த மதன் என்பவரது படகில் மதன், அந்தோணிராஜ் (54) உள்பட 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பெரியதாழை தூண்டில் பாலம் அருகே அவர்கள் வந்த போது திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றின் காரணமாக அவர்கள் வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மதன் உள்ளிட்ட 3 பேர் நீச்சல் அடித்து தப்பிய நிலையில் அந்தோணிராஜ் கடலில் தத்தளித்தவாறு இருந்துள்ளார். உடனே அங்கிருந்த சக மீனவர்கள், அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து திருச்செந்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியதாழை கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி appeared first on Dinakaran.

Tags : Periyadala ,Chatankulam ,Madan ,Periyathala ,Satankulam ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை