×

வாலிபர் மர்ம சாவு

புதுக்கோட்டை, ஜூலை 27: கீழச்செக்காரக்குடியை சேர்ந்தவர் சுப்பையா மகன் சண்முகம் (30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டதால், சண்முகம் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகம் வேலைக்கு சென்று வந்துள்ளார். அதன்பிறகு அவரை அக்கம்பக்கத்தினர் பார்க்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை சண்முகத்தின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையில், தனிப்பிரிவு காவலர் அருள்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சண்முகத்தின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, உடல் அழுகிய நிலையில் சண்முகம் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாலிபர் மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Shanmugam ,Subbiah ,Keechekkarakkudy ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!