×

நகை வாங்குவதுபோல் நடித்து 6 சவரன் நகை அபேஸ்: இளம்பெண்ணுக்கு போலீசார் வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மையப்பகுதியாக எப்போதும் அதிக மக்கள் நடமாட்டத்துடன் இருக்கும் மேட்டுத்தெரு பகுதியில், ஒரு கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 சவரன் மதிப்புள்ள 2 தங்க செயினை அபேஸ் செய்து இளம்பெண் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் அசோக் என்பவர் ஜுவல்லரி கடை நடத்தி வருகிறார். இங்கு தங்கம், வெள்ளி ஆபரண நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பகல் 11 மணி அளவில் டூவீலரில் வந்த இளம்பெண் ஒருவர் கடையில் நுழைந்து நகையை வாங்குவது போல் பல்வேறு நகைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென உரிமையாளரை திசை திருப்பிவிட்டு 24 கிராம் எடையுள்ள 2 தங்க செயினை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த டூவீலரில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத கடை உரிமையாளர் உடனடியாக வெளியே துரத்தி செல்லும் முன் அந்த இளம் பெண் அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் அசோக், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த இளம் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

டிப்டாப்பாக இருந்த இளம்பெண் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று கடை உரிமையாளர் எதிர்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், நகை வாங்குவதுபோல் நடித்து பெண்கள் அதைத் திருடி செல்லும் பல்வேறு சிசிடிவி காட்சிகளை பார்த்த நிலையில் இது போன்று எடுத்துக்கொண்டு ஓடும் காட்சி இதுவரை பார்த்ததில்லை எனவும் காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் திருடிச் செல்லப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் என தெரிய வருகிறது.

The post நகை வாங்குவதுபோல் நடித்து 6 சவரன் நகை அபேஸ்: இளம்பெண்ணுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Kanchipuram ,Metutheru ,Savaran ,
× RELATED காரைக்குடியில் பரபரப்பு: கத்தி...