சேலம்: திருமாவளவன் எம்பி மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வக்கீல் இமயவரம்பன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, குணசேகர், சிவா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி யுவராஜ், இதில் முகாந்திரம் எதுவும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தார்.
The post திருமாவளவன் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.